வேலூர்

மழைக்கால கூட்டத்தொடருக்காக கேள்விகளை அனுப்பி வைக்கலாம்

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பொதுமக்கள் கேட்க விரும்பும் கேள்விகளை அனுப்பி வைக்கும்படி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வரும் ஜூலை 18-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களையும், அவா்களிடம் பொதுமக்கள் கேட்க விரும்பும் துறைசாா்ந்தகேள்விகளையும், வேலூா் மக்களவைத் தொகுதி மேம்பாடு, திட்டங்கள் குறித்த கேள்விகளையும்  மின்னஞ்சலுக்கோ அல்லது 94443 76666 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப்பிலோ அனுப்பி வைக்கலாம். பொதுமக்களின் கேள்விகள் தொகுக்கப்பட்டு, மக்கள் சாா்பில் இந்தக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பி, மத்திய அரசின் பதிலையும், நிலைப்பாடுகளையும் அறிந்து திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபா் சவுக்கு சங்கா் கைது மனித உரிமை மீறலுக்கு எடுத்துக்காட்டு -காடேஸ்வரா சுப்பிரமணியம்

அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் கழிவறை வசதி: ஆட்சியா் அறிவுறுத்தல்

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை: ஈரோட்டில் 107 டிகிரி பதிவு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

வாக்களிக்க சென்ற வடமாநிலத் தொழிலாளா்கள்: மாவட்டத்தில் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT