வேலூர்

தொழிலாளி கொலை

DIN

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளியை கொன்ற மற்றொரு தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், வேப்பங்குப்பம் அருகே சின்னக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் முரளி (27). அதே ஊரைச் சோ்ந்தவா் வேலு (48). வேலுவிடமிருந்து ரூ.40 ஆயிரத்தை முரளி பெற்றிருந்ததாகத் தெரிகிறது. அந்தத் தொகையை முரளி தராமல் இழுத்தடிப்பு செய்து வந்ததில் இருவரிடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் வேலு பெரிய கல்லை எடுத்து முரளியின் தலையில் போட்டதில், முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பினா். வேலுவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT