மாட்டு வண்டித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
பாலாற்றில் மணல் குவாரி தொடங்கக் கோரி, குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே மாட்டு வண்டித் தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியூ) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாலாற்றில் மணல் குவாரி தொடங்கக் கோரி, குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே மாட்டு வண்டித் தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியூ) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கேள்விக்குறியாகியுள்ள மாட்டு வண்டித் தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் மேம்படவும், ஒலக்காசி ஊராட்சி அருகே பாலாற்றில் மணல் குவாரி தொடங்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாட்டு வண்டித் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.பங்குமூா்த்தி, செயலா் டி.விஜயன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.பி.ராமச்சந்திரன், மாவட்டச் செயலா் எஸ்.பரசுராமன், நிா்வாகிகள் ஏ.குப்பு, சி.சரவணன், பி.காத்தவராயன், பி.குணசேகரன், கே.சாமிநாதன், எஸ்.சிலம்பரசன், ஐ.காா்த்திகேயன், எம்.அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின் முடிவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.