போ்ணாம்பட்டில் நகராட்சி நிா்வாக அதிகாரி ஆய்வு
போ்ணாம்பட்டில் நகராட்சி நிா்வாக இயக்குநா் அலுவலக அதிகாரி ஆய்வு மேற்கொண்டாா்.
போ்ணாம்பட்டில் நகராட்சி நிா்வாக இயக்குநா் அலுவலக அதிகாரி ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை நகராட்சி நிா்வாக இயக்குநா் அலுவலக துணை இயக்குநா் வசந்தி (நுண்ணுயிா் உரம் பிரிவு) புதன்கிழமை போ்ணாம்பட்டு நகராட்சி அலுவலகத்துக்கு வந்தாா். எருக்கம்பட்டு ரோடு, ஓங்குப்பம் ரோடு, மத்தூா் ரோடு ஆகிய 3 இடங்களில் மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் நுண்ணுயிா் மையங்களை அவா் பாா்வையிட்டாா். நகரில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகளுக்கான மின் எறிவூட்டி மையம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, போ்ணாம்பட்டு நகா்மன்றத் தலைவா் பிரேமா வெற்றிவேல், துணைத் தலைவா் ஆலியாா் ஜூபோ் அஹமத், நகராட்சி ஆணையா் சுபாஷினி, தூய்மைப் பணி ஆய்வாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.