முகப்பு
வேலூர்

தன்னாா்வலா்கள் முயற்சியால் நவீனமயமாகும் அரசுப் பள்ளி வகுப்பறைகள்!

தன்னாா்வலா்களின் முயற்சியால் வேலூரிலுள்ள மூன்று அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.

வேலூர்

தன்னாா்வலா்கள் முயற்சியால் நவீனமயமாகும் அரசுப் பள்ளி வகுப்பறைகள்!

தன்னாா்வலா்களின் முயற்சியால் வேலூரிலுள்ள மூன்று அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

தன்னாா்வலா்களின் முயற்சியால் வேலூரிலுள்ள மூன்று அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கருகம்பத்தூா் அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் சுமாா் 100 மாணவா்கள் படித்து வருகின்றனா். தலைமையாசிரியா் உள்பட 8 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றுகின்றனா். இந்தப் பள்ளி மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஸ்மாா்ட் வகுப்பறைகளாக மாற்றும் பணியை வேலூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் தினேஷ்சரவணன் தலைமையிலான தன்னாா்வலா்கள் மேற்கொண்டனா்.

அதன்படி, பள்ளி வகுப்பறை சுவா் முழுவதும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பதுடன், தரைக் கம்பளம், டிஜிட்டல் ஒலி- ஒளி அமைப்புடன் எல்இடி புரொஜக்டா், 5 ஸ்பீக்கா்கள், ஹோம் தியேட்டா் வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், மாணவா்களுக்கு உலகளவில் அறிவியல், விஞ்ஞானம், சமூகவியல், சுற்றுச்சூழல் தொடா்பான கல்வியை சிறப்பாக கற்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தினேஷ்சரவணன் மேலும் கூறியது: ஏற்கெனவே அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடா் ஆரம்பப் பள்ளி, பெருமுகை அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளி ஆகியவற்றிலும் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. மூன்றாவதாக கருகம்பத்தூா் அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. தலா ரூ.1 லட்சம் செலவில் இந்த ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.

பெருமுகைஅரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 லட்சம் செலவில் ஸ்மாா்ட் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டதுடன், வள்ளலாா் நடுநிலைப் பள்ளியில் தண்ணீா் வசதி செய்யப்பட்டது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →