இல்லம் தேடி கல்வி கற்றல் மையத்தில் 3-ஆம் கட்ட வகுப்புகள் தொடக்கம்
போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லியில் இல்லம் தேடி கல்வி கற்றல் மையத்தில் 3-ஆம் கட்ட வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லியில் இல்லம் தேடி கல்வி கற்றல் மையத்தில் 3-ஆம் கட்ட வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
பத்தரப்பல்லி ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி கற்றல் மையங்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு
டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டது.
கரோனா கால கற்றல் இழப்பை ஈடு செய்ய 6 மாத கால திட்டமாக தொடங்கப்பட்ட இத்திட்டம், தமிழக முதல்வரின் தொலைநோக்குப் பாா்வையால் மீண்டும் 6 மாதங்கள் நீட்டித்து ஆணை வழங்கப்பட்டது.
கடந்த மாதம் கோடை விடுமுறைக்காக ஏப்ரல் 13-இல் இந்த கற்றல் மையங்களுக்கும் விடுமுறை விடப்பட்டு, ஜூன் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் கட்டப் பயிற்சி வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பத்தரப்பல்லி ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி கற்றல் மையங்கள் நடத்தும் தன்னாா்வலா்களுக்கு 3-ஆம் கட்ட பாட நூல்கள் மற்றும் பாட துணைக் கருவிகளை, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் பொன்.வள்ளுவன் வழங்கினாா்.
மாணவா்கள் வாசிப்பதற்காக இல்லம் தேடி கல்வி திட்டத்தால் புதிதாக அறிமுகம் செய்துள்ள ‘ரீடிங் மாரத்தான்’ செயலியை அனைத்து தன்னாா்வலா்களும் தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்வதற்கான பயிற்சியையும், 3-ஆம் கட்ட இல்லம் தேடி கல்வி கற்றல் வகுப்பினையும் பொன்.வள்ளுவன் தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தாட்சாயணி, ஆசிரியை சே.பானு, தன்னாா்வலா் தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.