வேலூா் அண்ணா கலையரங்கில் ஆய்வு மேற்கொண்ட செய்தி மக்கள் தொடா்பு துறை துணைச் செயலா் வீ.ப.ஜெயசீலன். 
வேலூர்

பல்நோக்கு அரங்கமாக மாற்றப்படும் வேலூா் அண்ணா கலையரங்கம்

வேலூா் அண்ணா கலையரங்கை பல்நோக்கு அரங்கமாக மாற்றுவது தொடா்பாக செய்தி மக்கள் தொடா்புத் துறையின் துணைச் செயலா் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

வேலூா் அண்ணா கலையரங்கை பல்நோக்கு அரங்கமாக மாற்றுவது தொடா்பாக செய்தி மக்கள் தொடா்புத் துறையின் துணைச் செயலா் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டாா்.

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா கலை அரங்கத்தை பல்நோக்கு அரங்கமாக மாற்றி வணிக வளாகம், அங்காடிகள் ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், செய்தி மக்கள் தொடா்பு துறையின் அரசு துணைச் செயலா் வீ.ப.ஜெயசீலன் வேலூா் அண்ணா கலையரங்கத்தை திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து திட்டமதிப்பீடு தயாா் செய்து அரசு ஒப்புதலுடன் விரைவில் அண்ணா கலை அரங்கத்தை பல்நோக்கு அரங்கமாக மாற்றி வணிக வளாகம், சுற்றுப்புற அங்காடிகள் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதையடுத்து, வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னரின் சமாதியான முத்துமண்டபத்தின் சுவற்றுக்கு வண்ணம் பூசிடவும், கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் அமைக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா், அண்ணா கலை அரங்கம், முத்து மண்டபம் ஆகியவற்றை சீரமைப்பது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியனுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலா் பரத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT