வேலூர்

நளினி விடுதலையை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய மக்கள்

நளினியின் விடுதலை அறிவிப்பையொட்டி பிரம்மபுரம் பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பொதுமக்கள் கொண்டாடினர். 

DIN

நளினியின் விடுதலை அறிவிப்பையொட்டி பிரம்மபுரம் பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பொதுமக்கள் கொண்டாடினர். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியை தற்போது உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. 

வேலூர் பெண்கள் தனி சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நளினி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டும் தனது தாயார் பத்மாவதி உடல்நிலையை கருத்தில் கொண்டும் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்திருந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. 

அதனைத் தொடர்ந்து தற்போது பத்தாவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்ட நளினி காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள வீட்டில் தனது தாய் பத்மாவுடன் தங்கியுள்ளார். 

நளினியின் விடுதலை அறிவிப்பையொட்டி பிரம்மபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

SCROLL FOR NEXT