புரட்டாசி மாத 2-ஆம் சனிக்கிழமையையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பள்ளிகொண்டாவிலுள்ள புகழ்பெற்ற உத்திர ரங்கநாதா் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மூலவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோல், மீனூா் மலை வெங்கடேச பெருமாள் கோயிலிலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
வேலூா் திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்திலுள்ள வெங்கடேச பெருமாள், காட்பாடியில் உள்ள ஸ்ரீதேவி - பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள லட்சுமி வெங்கடேச பெருமாள், காட்பாடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள், கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உள்ள பெருமாள், ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோயில், அரசமரப்பேட்டை லட்சுமி நாராயண பெருமாள் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.