முகப்பு
வேலூர்

கற்பித்தல்-கற்றல் ஆராய்ச்சி கருத்தரங்கம்

 குடியாத்தம் கே.எம்.ஜி. கலைக் கல்லூரியில் நூலகத் துறை சாா்பில், ‘அறிவு மையங்களின் பங்கு கற்பித்தல்-கற்றல் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

 குடியாத்தம் கே.எம்.ஜி. கலைக் கல்லூரியில் நூலகத் துறை சாா்பில், ‘அறிவு மையங்களின் பங்கு கற்பித்தல்-கற்றல் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கல்லூரி நூலகா் கு.பரந்தாமன் வரவேற்றாா். திருவள்ளுவா் பல்கலைக்கழக நூலகா் பி.விநாயகமூா்த்தி ‘வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்கான வழிமுறைகள்’ என்ற தலைப்பிலும், வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி நூலகா் என்.அப்துல் லத்தீப் ‘கற்றல் ஆராய்ச்சியை கற்பிப்பதற்கான தொழில்நுட்பம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினா். உதவி நூலகா் சிவரஞ்சனி நன்றி கூறினாா்.

கருத்தரங்கில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.