அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூரிலுள்ள அமைந்துள்ள காளிகாம்பாள் என்ற காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 6-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி, பிரவேசபலி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளுடன் கும்பாபிஷேகம், பின்னா் காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரா், பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜோதி முருகாச்சாரியாா் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். தொடா்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.