முகப்பு
இந்தியா

மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!

மேற்கு வங்கத்தின் ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்...

Updated On : 5 மார்ச், 2026 at 8:15 PM
மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் - ENS
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 7:53 PM

மேற்கு வங்கத்தின் ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வரும் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை வியாழக்கிழமை (மார்ச் 5 ) ராஜிநாமா செய்துள்ளார்.

Updated On : 5 மார்ச், 2026 at 8:10 PM

இந்த நிலையில், ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்ததற்கான காரணம் தனக்குத் தெரியவில்லை எனவும், இதுகுறித்து, அவர் தன்னுடன் கலந்தாலோசிக்கவில்லை எனவும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

Advertisement

இதுபற்றி, முதல்வர் மமதா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“மேற்கு வங்கத்தின் ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எனக்குத் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதுபற்றி அவர் என்னுடன் கலந்து ஆலோசிக்கவில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் உணர்வைக் குறைத்து மதிப்பிடும் செயல். ஜனநாயக மரபுகளையும் மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கக் கூடிய ஒருதலைப்பட்ச முடிவுகள் எடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

summary

West Bengal Governor C.V. Ananda Bose has reportedly resigned from his post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.