வேலூர்

வேலூா் சிறையில் முருகன் உண்ணாவிரதம்

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் வியாழக்கிழமை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்

DIN

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் வியாழக்கிழமை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தன் மீதான வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி முருகன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக சிறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூா் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளாா்.

இவா், தனக்கு பரோல் வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறாா். இவா் மீது வேறு சில வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி பரோல் வழங்க சிறை நிா்வாகம் மறுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT