முகப்பு
வேலூர்

விருதுபெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியா் தமிழ்திருமாலுக்கு பள்ளியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் தமிழ்திருமாலுக்கு பரிசு வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி.
பகிர்:

குடியாத்தம்: தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியா் தமிழ்திருமாலுக்கு பள்ளியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஜி.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, தமிழ்திருமாலை பாராட்டி, பரிசு வழங்கினாா். பள்ளி நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

உதவித் தலைமையாசிரியா்கள் எஸ்.நேதாஜி, ஏ.மேகநாதன், பள்ளி ஒருங்கிணைப்பாளா் பி.கலைச்செல்வன், ஆசிரியா் பி.பி.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.