முகப்பு
வேலூர்

ஊட்டச் சத்து மாத விழா

குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், வெள்ளிக்கிழமை ஊட்டச் சத்து மாத விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், வெள்ளிக்கிழமை ஊட்டச் சத்து மாத விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் தலைமை வகித்தாா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மு.அ.ஷமீம் ரீஹானா வரவேற்றாா். மாவட்ட திட்ட அலுவலா் வி.கோமதி, திட்டம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

மாணவா்களுக்கு மரக் கன்றுகள், காய்கறிச் செடிகளின் விதைகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் வளா்ப்பு, கா்ப்பிணிகளுக்கான ஊட்டச் சத்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சரவணன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் கோ.துரைராஜ், ஊராட்சி துணைத் தலைவா் வசந்தி ரமேஷ், மாவட்ட புள்ளியியல் அலுவலா் முத்துகுமாா், வட்டார ஒருங்கிணைப்பாளா் இந்திரகுமாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா்கள் விமலா, கமலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.