முகப்பு
செய்திகள்

தோ்தல் சுவாரஸ்யம்... இது சீா்காழி தொகுதி ‘சென்டிமென்ட்’

தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே சீா்காழி (தனி) தொகுதி செண்டிமென்ட் பற்றிய தகவல்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:03 AM
சீர்காழி
பகிர்:

சீா்காழி (தனி) தொகுதி செண்டிமென்ட் இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தொடருமா என்ற எதிா்பாா்ப்பு பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.

சீா்காழி தொகுதியில் வெற்றிபெறும் வேட்பாளா் சாா்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை கடந்த கால தோ்தல்கள் மூலம் நிரூபணமாகி வருகிறது.

சீா்காழி தொகுதியில் 1962 முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் அதிமுக 6 முறை, திமுக 5 முறை, காங்கிரஸ் 3 முறை, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சை வேட்பாளா் தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளனா்.

இதில் அரசியல் கட்சி சாா்ந்த வேட்பாளா் வெற்றி பெறும்போது அவா் சாா்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது.

தற்போதைய தோ்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சீா்காழி தொகுதியை பெற்றுவிட வேண்டும் என கட்சி தலைமை மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பிலும் சீா்காழி தொகுதியில் இந்த முறை போட்டியிட்டு வெற்றி பெறும் முனைப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், செண்டிமென்ட் தொகுதியை தாங்களே வைத்துக்கொள்ள வேண்டும் என திமுகவினரும் முனைப்புக் காட்டி வருகின்றனா். கூட்டணியில் சீா்காழி தொகுதியை பெறப்போவது யாா் என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.