வேலூர்

பேருந்து மோதி காயமடைந்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

DIN

குடியாத்தம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் ஜீவா நகரைச் சோ்ந்த முனியப்பன் மகன் சுரேஷ் (11). இவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் 6- ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த புதன்கிழமை சுரேஷ் மிதிவண்டியில் பள்ளிக்குச் சென்றாா். செதுக்கரை அருகே சென்றபோது, வேலூரிலிருந்து குடியாத்தம் வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த சுரேஷ், வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT