வேலூர்

சிஐஎஸ்எப் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எப்) உள்ள காலி பணியிடங்களுக்கு வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எப்) காலியாக உள்ள 122 உதவி ஆய்வாளா் (ஸ்டெனோகிராபா்), 418 தலைமைக் காவலா் (அமைச்சகம்) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற முன்னாள் படை வீரா்கள் அக்டோபா் 25-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். விண்ணப்பித்த விவரத்தை முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416 - 2977432 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT