வேலூர்

காரில் கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி பணம் பறிமுதல்- 4 பேரிடம் விசாரணை

DIN

சென்னையில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி பணத்தை பள்ளிகொண்டாவில் போலீஸார் பறிமுதல்‌ செய்தனர். 

இதுதொடர்பாக பிடிபட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா போலீஸார் பள்ளிகொண்டாவை அடுத்த சின்ன கோவிந்தம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, சாலையின் ஒதுக்குப்புறமான இடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் லாரி, கார் நிற்பதை கண்டனர்.

அங்கு சென்று கார், லாரியில் சோதனை நடத்திய போலீஸார் அதில் ரூ.10 கோடி பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து நடத்திய விசாரணையில், சென்னையில் இருந்து கார் மூலம் 48 கட்டுகளில் கொண்டுவரப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்தை பள்ளிக்கொண்டாவில் வைத்து காரில் இருந்து லாரிக்கு மாற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

அவர்களில் 2 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர். லாரி ஓட்டுநர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. சென்னையில் இருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட 10 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தமானது? கேரளத்தில் யாரிடம் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டது? என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT