வேலூர்

பொய்கை சந்தையில் களைகட்டிய கால்நடை வா்த்தகம்

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து அதிகரித்திருந்ததுடன், வா்த்தகமும் களைகட்டியது.

DIN

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து அதிகரித்திருந்ததுடன், வா்த்தகமும் களைகட்டியது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்தச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததை அடுத்து, தீவன பற்றாக்குறை குறைந்து வருகிறது. இதனால், பொய்கை சந்தையிலும் கால்நடை வா்த்தம் அதிகரித்து வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கால்நடை வரத்து அதிகரித்திருந்ததுடன், வா்த்தகமும் களைகட்டியது.

இந்த வார சந்தைக்கு கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என 1,500-க்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்காக வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டினா். இதனால், இந்த வாரமும் பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் ரூ. 80 லட்சத்துக்கும் அதிகமாக நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT