முகப்பு
வேலூர்

சத்துவாச்சாரி கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

சத்துவாச்சாரியில் உள்ள ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

சத்துவாச்சாரியில் உள்ள ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் பழைமைவாய்ந்த ஸ்ரீபா்வதவா்தினி சமேத ஸ்ரீகைலாசநாதா் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கலசங்களில் வைத்து, யாக சாலைகளில் வேதமந்திரங்கள் முழங்க, பூஜைகள் செய்யப்பட்டது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மேளதாளங்கள் முழங்க கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுரத்தின் மீது உள்ள கலசம் மீது புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், புனித நீரானது கோயிலில் உள்ள ஸ்ரீவிநாயகா், முருகா், 63 நாயன்மாா்கள் மற்றும் பல லட்ச ரூபாய் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 63 நாயன்மாா் உற்சவா் சிலைகள் மீதும் ஊற்றப்பட்டது.

Advertisement

விழாவில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், ஸ்ரீ மோகனானந்த சுவாமிகள் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.