முகப்பு
தற்போதைய செய்திகள்

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நிலையில், 30 மாதங்களுக்குப் பிறகு 2026, ஏப்.16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக...

Updated On : 17 ஏப்ரல் 2026, 9:15 am IST
நாடாளுமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம், 2023 அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மகளிா் இடஒதுக்கீடு தொடா்பான சட்டத் திருத்தங்கள் மீது வெள்ளிக்கிழமை(ஏப்.17) வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், 30 மாதங்களுக்குப் பிறகு 2026, ஏப்.16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது ஏன் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

2023-இல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மகளிருக்கான இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அமலுக்கு வந்தாலும், தற்போதைய மக்களவையில் இது நடைமுறைக்கு வராது. அடுத்ததாக மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னரே, இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். அதாவது 2034-ஆம் ஆண்டில்தான் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

summary

Despite receiving Presidential assent in 2023, the reservation has not come into force. As per the official gazette, Article 334A of the Act stipulates that the reservation shall come into effect only after a delimitation exercise is undertaken using figures from the...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.