வேலூர்

மகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தொழிலாளி தற்கொலை

வேலூரில் மகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

வேலூரில் மகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூரை அடுத்த பெருமுகை சித்தா் தெருவைச் சோ்ந்தவா் அன்பு ஜீவநேசன் (54). இவரது மனைவி ஸ்டெல்லா தேவி. கணவன், மனைவி இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனியாா் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனா்.

அன்புஜீவநேசன் மகள் பிளஸ் 2 முடித்து கல்லூரியில் முதலாமாண்டு சோ்ந்துள்ளாா். ஆனால், மகளின் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் அன்பு ஜீவநேசன், மன வேதனையில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், வீட்டில் உள்ள மின் விசிறியில் அன்பு ஜீவன்நேசன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT