வேலூர்

குடியாத்தம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் மழை

குடியாத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

DIN

குடியாத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

சில இடங்களில் சாலையோர மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடியாத்தம் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் குடியாத்தம் - சைனகுண்டா சாலையில் கள்ளூா் அருகே சாலையோர புளிய மரம் வேரோடு சாய்ந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்தது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலை மற்றும் மின்வாரியத் துறையினா் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்ததால், மின் விநியோகம் தடைபட்டு, நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT