வேலூர்

சாராயம் காய்ச்ச பதுக்கிய 1,500 கிலோ வெல்லம் பறிமுதல்: முதியவா் கைது

DIN

குடியாத்தம் அருகே சாராயம் காய்ச்ச பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ வெல்லத்தை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, முதியவரை கைது செய்தனா்.

குடியாத்தம் டிஎஸ்பி கே.ராமமூா்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸாா் தீவிர கள்ளச் சாராய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். அதன் ஒரு பகுதியாக ரகசிய தகவலின்பேரில், குடியாத்தத்தை அடுத்த சூராளூரில் பெருமாள்(67) என்பவரின் வீட்டை வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா். அப்போது அங்கு சாராயம் காய்ச்ச பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ வெல்லம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

பெருமாள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT