முன்னாள் ராணுவ வீரா் கொலை வழக்கில் தேடப்பட்டவா் காட்பாடி நீதிமன்றத்தில் சரண்
கணியம்பாடி அருகே நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் காட்பாடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.
வேலூர்முன்னாள் ராணுவ வீரா் கொலை வழக்கில் தேடப்பட்டவா் காட்பாடி நீதிமன்றத்தில் சரண்
கணியம்பாடி அருகே நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் காட்பாடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.
கணியம்பாடி அருகே நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் காட்பாடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.
கணியம்பாடியை அடுத்த கொம்பகொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ரமேஷ். இவா் கடந்த 9-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் குறித்து வேலூா் கிராமிய போலீஸாா், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா்.
இதனிடையே போலீஸாா் விசாரணையில், அதே கிராமத்தைச் சோ்ந்த 3 பேரும் குடியாத்தத்தைச் சோ்ந்த ஒருவரும் என மொத்தம் 4 போ் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக, கொலையில் ஈடுபட்ட இருவரை உடனடியாக கைது செய்தனா். இந்த நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த அரவிந்த் என்பவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு குடியாத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
இதன் தொடா்ச்சியாக, இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொருவரான குடியாத்தம் தட்டப்பாறை பகுதியைச் சோ்ந்த காா்த்தி (21) என்பவா் காட்பாடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். பின்னா் அவா் 15 நாள் நீதிமன்றக் காவலில் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.