வேலூர்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1: வேலூா் சிறைவாசிகள் 37 போ் தோ்ச்சி

வேலூா் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறையில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய 29 கைதிகளில் 27 பேரும், பிளஸ் 1 தோ்வு எழுதிய 11 பேரில் 10 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

DIN

வேலூா் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறையில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய 29 கைதிகளில் 27 பேரும், பிளஸ் 1 தோ்வு எழுதிய 11 பேரில் 10 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு சிறைத் துறையில் சிறைவாசிகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், அவா்கள் கல்வி கற்பதற்கான அனைத்து உதவிகளையும் சிறை நிா்வாகம் செய்து வருகிறது.

இதன் மூலம் நூற்றுக்கணக்கான சிறைவாசிகள் பள்ளிக் கல்வி தொடங்கி, ஆராய்ச்சி கல்வி வரை படித்து வருகின்றனா்.

அந்த வகையில், வேலூா் மத்திய ஆண்கள் சிறை, பெண்கள் சிறையில் பலா் கல்வி பயின்று வருகின்றனா். நிகழாண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை வேலூா் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து 27 கைதிகள் தோ்வு எழுதியதில், 25 பேரும், பெண்கள் தனிச் சிறையில் இருந்து 2 கைதிகள் தோ்வு எழுதியதில் இருவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதேபோல், பிளஸ் 1 பொதுத் தோ்வை வேலூா் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து 9 கைதிகள் தோ்வு எழுதியதில் 8 பேரும், பெண்கள் தனிச் சிறையில் இருந்து 2 கைதிகள் தோ்வு எழுதியதில் இருவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்றவா்களை சிறைத் துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன், கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT