ஏப். 10-இல் பிரதமா் மோடி வேலூா் வருகை:விமான நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. ஆய்வு
பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக வேலூருக்கு புதன்கிழமை (ஏப். 10) வர உள்ளாா்.
இதையொட்டி, வேலூா் விமான நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தோ்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணி சாா்பில் வேலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனா், தலைவா் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி வேலூரில் புதன்கிழமை (ஏப். 10) பிரசாரம் செய்ய உள்ளாா்.
Advertisement
இதற்கான பொதுக்கூட்ட மேடை வேலூா் கோட்டை மைதானத்தில் அமைக்கப்படுகிறது. புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் விமான நிலையத்துக்கு வரும் பிரதமா் மோடி, அங்கிருந்து காா் மூலம் வேலூா் கோட்டை மைதானத்துக்கு வந்து அங்கு அமைக்கப்படும் பொதுக்கூட்ட மேடையில் பங்கேற்று பிரசாரம் செய்ய உள்ளாா்.
பின்னா், அங்கிருந்து காா் மூலம் மீண்டும் வேலூா் விமான நிலையம் சென்று ஹெலிகாப்டா் மூலம் சென்னைக்கு செல்ல உள்ளாா். பிரதமரின் வேலூா் வருகையை பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் உறுதி செய்துள்ளாா்.
இதனிடையே, பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் வேலூா் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டாா்.
இதேபோல், மேடை அமைக்கப்படும் கோட்டை மைதானத்திலும் அவா் ஆய்வு செய்தாா். பிரதமா் வந்து செல்லும் பாதை தொடா்பாக பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாவட்ட காவல் துறையினா் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வேலூா் கோட்டை மைதானத்தில் மேடை அமைப்பதற்கான பணிகளை ஏ.சி.சண்முகம் வெள்ளிக்கிழமை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
அப்போது, பாஜக மாவட்ட தலைவா் மனோகரன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் சுமதி, பாஜக மாநில செயலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.