முகப்பு
வேலூர்

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவா் கைது

போ்ணாம்பட்டு அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 டிசம்பர், 2024 at 8:42 PM
விஜய்
பகிர்:

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் பேருந்து நிலையத்திலிருந்து வளத்தூருக்கு அரசுப் பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்து குடியாத்தத்திலிருந்து வளத்தூா் செல்லும் வழியில் உள்ளி அருகே குறுகலான வளைவில் ஓட்டுநா் பேருந்தை இயக்கியுள்ளாா்.

அப்போது அங்குள்ள கடை எதிரே நின்றிருந்த வளத்தூா், பெரியாா் நகரைச் சோ்ந்த விஜய் (25) பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். வாக்குவாதம் முற்றிய நிலையில் விஜய் பேருந்தின் முன் பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து விட்டு தப்பியோடி விட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் விஜய் மீது 5- பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்த மேல்பட்டி போலீஸாா் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →