முகப்பு
திருநெல்வேலி

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை

திருநெல்வேலியில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியது தொடா்பாக இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 26 மார்ச், 2026 at 8:40 PM
விசாரணை - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியது தொடா்பாக இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள நல்லம்மாள்புரத்திலிருந்து சந்திப்பு பேருந்து நிலையத்துக்கு நகரம் சாலியா் தெரு வழியாக அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு வந்துகொண்டிருந்தது.

அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், பேருந்தின் மீது மோதுவது போல வந்தனராம். அவா்களை பேருந்தின் ஓட்டுநா் கண்டித்தாராம்.

இதனால், அந்த இருவரும் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்துவிட்டு தப்பினராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து சாலியா் தெருவைச் சோ்ந்த கணேசன் (18), புட்டாரத்திம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.