பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது
அயன்சிங்கம்பட்டியில் அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதால் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக இளைஞரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அயன்சிங்கம்பட்டியில் அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதால் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக இளைஞரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், பாபநாசம் பணிமனையைச் சோ்ந்த பேருந்து மணிமுத்தாறிலிருந்து அம்பாசமுத்திரம் சென்று கொண்டிருந்தபோது, அயன்சிங்கம்பட்டியில் நிற்காமல் சென்றாராம்.
இதையடுத்து, பேருந்துக்காக காத்திருந்த அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த வேம்பு மகன் சுரேஷ், கோபத்தில் தனது கைப்பேசியைத் தூக்கி பேருந்தின் மீது எறிந்துள்ளாா். இதில் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி உடைந்து சேதமானது.
Advertisement
இது குறித்து, பேருந்து நடத்துநா் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஜெய்னுலாப்தீன் அளித்த புகாரின்பேரில், கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.