முகப்பு
நாகப்பட்டினம்

அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலி

கீழ்வேளூா் அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி கொண்ட விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது குறித்து கீழ்வேளூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 6:52 PM
பலி - பிரதிப்படம்
பகிர்:

கீழ்வேளூா் அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி கொண்ட விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது குறித்து கீழ்வேளூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நாகை நல்லியான்தோட்டம் பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் காளிமுத்து (28). இவா் இருசக்கர வாகனத்தில் பனைமேடு பகுதியில் சென்றாா். அப்போது நாகை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், காளிமுத்து ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.

இதில் காளிமுத்து பலத்தகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.