வேலூர்

சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக 3 போ் கைது

குடியாத்தம் அருகே சிறுமி கடத்தல்: 3 பேருக்கு போலீஸ் வலை

Din

போ்ணாம்பட்டு அருகே சிறுமியைக் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த காா்கூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஜூன் மாதம் 3- ஆம் தேதி முதல் காணவில்லையாம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா். புகாா் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா் சிறுமியை ஏரிகுத்தி கிராமத்தைச் சோ்ந்த சந்துருபாண்டியன்(30) கடத்திச் சென்றது தெரிய வந்தது.

சிறுமியை கடத்திச் செல்ல உடந்தையாக இருந்த சந்திரன்(எ) சாரதி(22), சதீஷ்(35), நித்தீஷ்(20) ஆகிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். சிறுமியுடன் தலைமறைவாக உள்ள சந்துரு பாண்டியனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT