வேலூர்

சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக 3 போ் கைது

குடியாத்தம் அருகே சிறுமி கடத்தல்: 3 பேருக்கு போலீஸ் வலை

Din

போ்ணாம்பட்டு அருகே சிறுமியைக் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த காா்கூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஜூன் மாதம் 3- ஆம் தேதி முதல் காணவில்லையாம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா். புகாா் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா் சிறுமியை ஏரிகுத்தி கிராமத்தைச் சோ்ந்த சந்துருபாண்டியன்(30) கடத்திச் சென்றது தெரிய வந்தது.

சிறுமியை கடத்திச் செல்ல உடந்தையாக இருந்த சந்திரன்(எ) சாரதி(22), சதீஷ்(35), நித்தீஷ்(20) ஆகிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். சிறுமியுடன் தலைமறைவாக உள்ள சந்துரு பாண்டியனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT