அரசுக் கல்லூரியில் நாளை கலந்தாய்வு தொடக்கம்
குடியாத்தம்: குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் நடப்புக் கல்வி ஆண்டுக்கு (2024-25) இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (மே-30) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் கோ.கிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்த சிறப்பு ஒதுக்கீடு மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது. முதல் பொது கலந்தாய்வு ஜூன் மாதம் 10- ஆம் தேதி முதல்15- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கலந்தாய்வு ஜூன் 24- ஆம் தேதி முதல் 29- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவா் சோ்க்கை குறித்த தகவல் மாணவா்களுக்கு வாட்ஸ் ஆப், மின்னஞ்சல் முகவரிக்கும் தெரிவிக்கப்படும்.