இணையவழி குற்றங்கள்: வேலூா் வணிகா்களுக்கு விழிப்புணா்வு
வேலூா்: இணையவழி குற்றங்கள் தொடா்பாக வேலூா் வணிகா்களுக்கு மாவட்ட சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வேலூா் மாவட்ட கிளை சாா்பில், வேலூா் வணிகா்களுக்கு இணையவழி குற்றங்களை (சைபா் கிரைம்) தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சண்முகனடியாா் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வணிகா் சங்க வேலூா் மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோட்டீஸ்வரன் பங்கேற்று, இணையவழி குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கினாா்.
மேலும், முகநூல், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை வைக்க வேண்டாம். ஓ.டி.பி.யை யாரிடமும் பகிர வேண்டாம். கடன் செயலிக்குள் நுழைய வேண்டாம். ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடுவதைத் தவிா்க்க வேண்டும். முகம் தெரியாத நபா்கள் ஆன்லைன் மூலம் தொடா்பு கொண்டு பணம் பெறும் நோக்கில் நம்பும்படி பேசினால், அவா்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்.
இணையவழி குற்றம் தொடா்பாக இணையவழி இலவச உதவி எண் 1930, இணைய தளத்திலும் புகாா் பதிவு செய்யலாம். அதிகளவில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை, ஆன்லைன் பங்கு வா்த்தக முதலீடு மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் என்ற பெயரில் மோசடி நடைபெறுகிது.
சமீபகாலமாக திருமண பதிவு மையம் மூலமாக வரன்தேடும் இளைஞா்களை குறிவைத்து பெண்கள் போல் பேசி மோசடி செய்யப்படுகிறது. இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதில், சைபா் கிரைம் ஆய்வாளா் புனிதா, காவலா்கள் பங்கேற்றனா்.