குடியாத்தம்  புதிய  பேருந்து  நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா். 
வேலூர்

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம்: திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம்: திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

Din

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வேலூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜி.சுரேஷ் குமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கிருஷ்ண வேணி ஜலந்தா், மாவட்ட பொருளாளா் விஜயேந்திரன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் என்.எம்.டி.விக்ரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விசிக மாவட்டச் செயலா் சுதாகா், காங்கிரஸ் மாநில பேச்சாளா் நாட்டாம்காா் அப்துல் அக்பா், பொதுக்குழு உறுப்பினா் ஆடிட்டா் கிருபானந்தம் ஆகியோா் கண்டன உரையாற்றினா். வட்டார காங்கிரஸ் தலைவா்கள் எம்.வீராங்கன், சா.சங்கா், ஜோதிகணேசன், லோகிதாஸ், தாண்டவமூா்த்தி, போ்ணாம்பட்டு நகர தலைவா் முஜம்மில் அகமத், மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் கோமதி குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கட்சியினா் சிலா் தங்களின் கண்களில் கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். மாவட்ட பொதுச் செயலா் பாரத் நவீன்குமாா் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டாா்.

அரசியலமைப்பின் மீது அக்கறை இருப்பதாக பாஜக-ஆர்எஸ்எஸ் பாசங்கு: கார்கே!

தேசியவாத சிந்தனையை ஏற்க வழிகாட்டும் அரசியலமைப்புச் சட்டம்! குடியரசுத் தலைவர்

காது கேட்கவில்லையா? அலட்சியம் வேண்டாம்! உங்கள் மூளையைப் பாதிக்கலாம்!!

ராய சிம்மாசனம்

பாரதிய நீதிச் சட்டம்

SCROLL FOR NEXT