குடியாத்தம்- ஆம்பூா் இடையே இரு வேறு வழித்தடங்களில் 3- புதியபேருந்துகள் செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டன.
குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளா் கந்தசாமி தலைமை வகித்தாா். குடியாத்தம் நகரிலிருந்து பச்சகுப்பம் வழியாக ஆம்பூருக்கு ஒரு பேருந்தும், நரியம்பட்டு வழியாக ஆம்பூருக்கு 2- பேருந்துகளும் இயக்கி வைக்கப்பட்டன.
புதிய பேருந்துகளை எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.