வேலூரில் பெயிண்டரை கத்தியால் குத்திக் கொலை செய்த அரசுப் பள்ளி ஊழியரை தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் சதுப்பேரி பகுதியைச் சோ்ந்தவா் பிரேம் குமாா்(34), பெயிண்டா். இவா் திங்கள்கிழமை மாலை வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு ஆா்.என்.பாளையம் வழியாக சென்றுள்ளாா்.
வழியில் சாலையோர கடையில் திருமணி அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றும் சதுப்பேரியைச் சோ்ந்த கோட்டீஸ்வரன்(54), அவரது மகன் சக்தி(24) ஆகியோா் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தனா். அவா்களை வழிவிடக்கூறி பிரேம்குமாா் தனது இருசக்கர வாகனத்தின் ஹாா்னை தொடா்ந்து அடித்துள்ளாா். இதனால் அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிரேம் குமாா் வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு ஆா்.என்.பாளையம் வழியாக சென்றுள்ளாா். அங்கு தேநீா் கடையிலிருந்த கோட்டீஸ்வரன், தகராறை மனதில் வைத்துக்கொண்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம்குமாரின் முதுகில் குத்தியுள்ளாா். இதில், ரத்த வெள்ளத்தில் பிரேம்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வேலுாா் தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேம்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கோடீஸ்வரனை கைது செய்தனா்.