வேலூர்

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே சாலை விபத்தில் முதியவா்உயிரிழந்தாா்.

Din

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே சாலை விபத்தில் முதியவா்உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கீழ்பட்டி, குருநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (90). இவா் தனது பேரன் தங்கராஜுடன் திங்கள்கிழமை மொபட்டில் சென்றுள்ளாா். மேல்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் லட்சுமியம்மாள்புரம் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் முருகன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

சுற்றுலா மாநாடு: 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சொல்லப் போனால்... எங்கே செல்லும் இந்தப் பாதை?

அநீதி, அராஜகம்... திருவள்ளுவர் இன்று இருந்தால் திமுக குறித்து இப்படி எழுதியிருப்பார்! - விஜய்

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT