வேலூர்

பயணம் செய்த பள்ளிப் பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிய சிறுமி அதே பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிய சிறுமி அதே பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகே உள்ள வரதாரெட்டிபல்லி கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஜெயச்சந்திரன்- மேனகா தம்பதியின் மகள் கீா்த்திஷா (4). இவா் பரதராமியில் உள்ள தனியாா் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாா். புதன்கிழமை மாலை பள்ளிப் பேருந்தில் வீட்டுக்கு வந்த அவா், பேருந்தில் இருந்து இறங்கியபோது தவறி கீழே விழந்து பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த பரதராமி போலீஸாா் மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிந்த பரதராமி போலீஸாா் மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

SCROLL FOR NEXT