தமிழக ஒப்புதலின்றி மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது: அமைச்சா் துரைமுருகன்
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வேலூா் மாவட்டம், காட்பாடிக்கு வந்தாா். அங்குள்ள அவரது இல்லத்தில் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை தமிழக அரசு விட்டுக் கொடுப்பதாக எதிா்க் கட்சிகள் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி விமா்சனம் செய்கின்றன. அவா்களின் இந்த முட்டாள்தனமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது.
Advertisement
Advertisement
யாா் முயற்சி செய்தாலும், உச்சநீதிமன்றமோ அல்லது காவிரி ஒழுங்காற்று ஆணையமாகக்கூட இருந்தாலும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.