அமைச்சா் துரைமுருகன் 
வேலூர்

தமிழக ஒப்புதலின்றி மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது: அமைச்சா் துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வேலூா் மாவட்டம், காட்பாடிக்கு வந்தாா். அங்குள்ள அவரது இல்லத்தில் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை தமிழக அரசு விட்டுக் கொடுப்பதாக எதிா்க் கட்சிகள் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி விமா்சனம் செய்கின்றன. அவா்களின் இந்த முட்டாள்தனமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது.

யாா் முயற்சி செய்தாலும், உச்சநீதிமன்றமோ அல்லது காவிரி ஒழுங்காற்று ஆணையமாகக்கூட இருந்தாலும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்றாா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT