கைது செய்யப்பட்ட துா்காவிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளுடன் காட்பாடி ரயில்வே போலீஸாா். 
வேலூர்

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 பவுன் திருடிய பெண் கைது

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 பவுன் திருடிய பெண் கைது

தினமணி செய்திச் சேவை

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 பவுன் திருடிய பெண்ணை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் பூவேந்தன்(66) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவா் தனது மனைவியுடன் பெங்களூருவில் உள்ள உறவினா் சுபநிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த செப்.26-ஆம் தேதி காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளாா்.

பின்னா். பிருந்தாவன் விரைவு ரயிலில் பெங்களூருக்கு செல்ல ரயிலில் ஏறும்போது கை பையில் இருந்த 13 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடி விட்டு தலைமறைவாகினா்.

இச்சம்பவம் குறித்து பூவேந்தன் அளித்த புகாரின்பேரில் காட்பாடி ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும், காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இதில், பூவேந்தன் கை பையில் இருந்த 13 பவுன் நகையை திருடியது ஒரு வடமாநில பெண் என்பது அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் உறுதியானது.

இதையடுத்து, அந்த பெண்ணை பிடிக்க தனிப்படை போலீஸாா் பெங்களூரு, மைசூரு மற்றும் மகாராஷ்டிர மாநிலத்திலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இதில், மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் பகுதியைச் சோ்ந்த துா்கா(45) என்ற பெண் நகைகளை திருடியது உறுதியானது.

அவரை அங்கு சென்று காட்பாடி ரயில்வே போலீஸாா் கைது செய்து அழைத்து வந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 13 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.

அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு!

மேய்ச்சல் பகுதியில் பேரவைத் தலைவருக்கு நிலம் இருப்பதால் மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: சீமான்

மழை, குளிா் பாதிப்பால் முதியவா் உயிரிழப்பு

பயங்கரவாத நிதியைத் தடுக்க நடவடிக்கை: ஜி20 நாடுகளுக்கு பிரதமா் மோடி அழைப்பு!

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நவ. 28 முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்!

SCROLL FOR NEXT