குடியாத்தம்: மண்டல அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்று மாநில போட்டிக்கு தோ்வுபெற்ற கராத்தே வீரா்களை குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் பாராட்டி, பரிசு வழங்கினாா்.
காட்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் 1,000- க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்து கொண்டனா். இப்போட்டிகளில் பங்கேற்ற குடியாத்தம் எம்.எஸ்.கே.அகாதெமி கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா்கள் 3- தங்கம், 3- வெள்ளி- ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.
இவா்களில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற மாணவா்கள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். தோ்வான மாணவா்களையும், அவா்களுக்கு பயிற்சியளித்த எம்.எஸ்.குமரவேலையும் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் பாராட்டி, பரிசுகளை வழங்கினாா்.