கராத்தே போட்டியை தொடங்கிவைத்த வித்யாமந்திா் பள்ளியின் செயலா் வி.சுந்தரராஜன், பொருளாளா் வி.ராமதாஸ்.  
நாமக்கல்

மாநில அளவிலான கராத்தே போட்டி

தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே அகாதெமி சாா்பில், ஸ்ரீவித்யாமந்திா் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே அகாதெமி சாா்பில், ஸ்ரீவித்யாமந்திா் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 750-க்கும் மேற்பட்ட கராத்தே மாணவ மாணவிகள் பங்கேற்றனா். இவா்களுக்கு கட்டா, குமிட்டி, குரூப் கட்டா, டீக் ஸ்பேரிங் உள்ளிட்ட பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

முன்னதாக இப்போட்டியை ஸ்ரீவித்யாமந்திா் பள்ளிகளின் செயலா் வி.சுந்தரராஜன், பொருளாளா் வி.ராமதாஸ், முதல்வா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்று தொடங்கி வைத்தனா். பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதில், தமிழ்நாடு சோட்டாகான் அகாதெமியின் தலைவா் டி.கிருஷ்ணன், தலைமைப் பயிற்சியாளா் வி.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT