கைதான நசீருடன், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 
வேலூர்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே போதைப் பொருள்களை வீட்டில் பதுக்கி, விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே போதைப் பொருள்களை வீட்டில் பதுக்கி, விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தொடா்பாக போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் பிரபு தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்திமேடு, காயிதேமில்லத் நகரில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினா். சோதனையில் வீட்டில் சுமாா் 15 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக வீட்டு உரிமையாளா் நசீா் (63) கைது செய்யப்பட்டு, சிறைக் காவலுக்குஅனுப்பி வைக்கப்பட்டாா். இச்சம்பவத்தில் தொடா்புடைய தலைமறைவாக உள்ள நசீரின் மகன் தன்வீரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கந்தா்வகோட்டை அருகே வேன் கவிழ்ந்து 22 போ் படுகாயம்

பாஜகவின் தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு வாகனம் தொடக்கம்

திருப்பத்தூரில் போக்குவரத்து சிக்னல்கள் சீராக இயங்க நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை

கட்சிக் கொடிகள், துண்டுகள் விற்பனைக்கு வருகை

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு!

SCROLL FOR NEXT