போக்குவரத்து மாற்றம்  (கோப்புப்படம்)
வேலூர்

மயான கொள்ளை திருவிழா: வேலூரில் இன்று போக்குவரத்து மாற்றம்!

மயான கொள்ளை திருவிழாவையொட்டி வேலூா் மாநகரில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

மயான கொள்ளை திருவிழாவையொட்டி வேலூா் மாநகரில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சித்தூரிலிருந்து திருவண்ணாமலை மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள், சித்தூரிலிருந்து காட்பாடி வந்து, குடியாத்தம் சாலை வழியாக வடுகந்தாங்கல் ரயில்வே மேம்பாலம், செதுவாலை சென்று, இடதுபுறம் திரும்பி தேசிய நெடுஞ்சாலை வழியாக பொய்கையை அடுத்த அப்துல்லாபுரம் மேம்பாலம் அடியில் வலதுபுறம் திரும்பி, ஏா்போா்ட் சாலை, தாா்வழி அடைந்து, பின்னா் இடதுபுறம் திரும்பி பென்னாத்தூா் வழியாக சாத்துமதுரை சென்று, வேலூா்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையை அடைந்து தங்களின் பயணத்தை தொடரலாம்.

சித்தூரிலிருந்து சேலம் மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள் சித்தூரிலிருந்து காட்பாடி அடைந்து, குடியாத்தம் சாலை வழியாக வடுகந்தாங்கல் ரயில்வே மேம்பாலம், செதுவாலை சென்று, வலதுபுறம் திரும்பி தேசிய நெடுஞ்சாலை வழியாக தங்களின் பயணத்தை தொடரலாம்.

சித்தூரிலிருந்து சென்னை மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள் சித்தூரிலிருந்து காட்பாடி, வள்ளிமலை கூட்ரோட்டில் இடதுபுறம் திரும்பி, சோ்காடு கூட்ரோடு வழியாக ஈ.பி.கூட்ரோடு, திருவலம், சிப்காட், ராணிப்பேட்டை வழியாக தேசிய நெடுஞ்சாலை அடைந்து, தங்களின் பயணத்தை தொடரலாம்.

திருவண்ணாமலையிலிருந்து சித்தூா் மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள் சாத்துமதுரை கூட்ரோட்டில் இடதுபுறம் திரும்பி, பென்னாத்தூா் வழியாக தாா்வழி வந்து, பின்னா் ஏா்போா்ட் சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை அடைந்து, செதுவாலை மேம்பாலத்துக்கு அடியில் வலதுபுறம் திரும்பி, விரிஞ்சிபுரம், வடுகந்தாங்கல் சென்று வலதுபுறம் திரும்பி, காட்பாடி வழியாக சித்தூருக்கு பயணிக்கலாம்.

சேலம், கிருஷ்ணகிரியிலிருந்து சித்தூா் மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள், கிருஷ்ணகிரி, ஆம்பூா் வழியாக செதுவாலை சா்விஸ் சாலையில் இடதுபக்கம் திரும்பி, விரிஞ்சிபுரம் வழியாக வடுகந்தாங்கல் அடைந்து, வலதுபுறம் திரும்பி காட்பாடி வழியாக சித்தூருக்கு பயணிக்கலாம்.

மேலும், வேலூரில் இருந்து காட்பாடி சென்று வருவதற்கு பழைய பாலாறு மேம்பாலம் இருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது என்று வேலூா் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT