கையுந்துப்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு ரூ.1.80 லட்சம் பரிசு
வேலூர்கையுந்துப்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு ரூ.1.80 லட்சம் பரிசு
வேலூரில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.1.80 லட்சம் பரிசுத் தொகையுடன் கோப்பைகள் வழங்கப்பட்டன.
வேலூா் மாவட்டக் காவல்துறை, மாவட்டக் கையுந்துப் பந்து சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் மின்னொளி கையுந்துப் போட்டி வேலூா் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.
இதில், ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை வேலூா் பெருமுகை அணியும், இரண்டாம் இடத்தை சென்னை பனிமலா் அணியும் பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை திருச்செந்தூா் சிவந்தி ஆதித்தன் அணியும், இரண்டாம் இடத்தை சென்னை செயின்ட் ஜோசப் அணியும் பிடித்தன.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல், இரண்டாம், மூன்றாவது, நான்காவது இடம்பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கோப்பைகளும், பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல், இரண்டாம், மூன்றாவது, நான்காவது இடம் பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.25 ஆயிரம் ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கோப்பைகளும் என மொத்தம் 8 அணிகளுக்கு ரூ.1.80 லட்சம் பரிசுத்தொகொகையுடன், கோப்பைகள் வழங்கப்பட்டன.
பரிசுகளை வேலூா் மாவட்டக் கையுந்துப் பந்து சங்க தலைவரும் விஐடி துணைத்தலைவருமான ஜி.வி.செல்வம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன் ஆகியோா் வழங்கினா். மேலும், சிறந்த வீரா், வீராங்கனைகளுக்கு தலைக்கவசம் பரிசாக வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், வேலூா் மாவட்ட கையுந்து பந்து சங்க மாவட்ட தலைவா் தியாகசந்தன், செயலாளா் லட்சுமணன், துணைத்தலைவா் வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.