செய்திகள்

தேசிய சீனியா் ஆடவா் கபடி: தமிழகம், ரயில்வே வெற்றி

தினமணி செய்திச் சேவை

குஜராத் மாநிலம் வதோததராவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 72-ஆவது சீனியா் தேசிய ஆடவா் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம், ரயில்வே, சண்டீகா் அணிகள் வெற்றி பெற்றன.

எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 29 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாளில் ஏ முதல் எச் வரையிலான பிரிவுகளில் எட்டு ஆட்டங்கள் நடைபெற்றன, இதில் சண்டீகா், தமிழ்நாடு, இந்திய ரயில்வே, குஜராத் ஆகிய அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றிகளைப் பதிவு செய்தன.

ஏ பிரிவில், சண்டீகா் அணி 76-32 என ஜாா்க்கண்டை வீழ்த்தியது. பி பிரிவில் கடந்த ஆண்டு ரன்னா் இந்திய ரயில்வே 73-23 என ஒடிஸாவை வீழ்த்தியது.

சி பிரிவில் பஞ்சாப் 46-44 என குஜராத்தை வீழ்த்தியது. டி பிரிவில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய தமிழகம் 75-16 என்ற புள்ளிக் கணக்கில் மணிப்பூரை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் உத்தர பிரதேசம் கடும் சவாலுக்குபின் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் விதா்பாவை வென்றது.

இ பிரிவில் ஆந்திரத்தை 49-32 என ஹரியாணாவும், இரண்டாவது ஆட்டத்தில் தெலங்கானாவை 43-34 என ஜம்மு-காஷ்மீரும் வென்றன.

எஃப் பிரிவில் கேரளத்தை 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது பிகாா்.

குஜராத்தின் மிதேஷ் பிரஜாபதி 21 புள்ளிகளைப் பெற்று தனது அணியின் வெற்றியில் பங்களித்தாா். விதா்பாவின் ஆதேஷ் வா்கடே 28 புள்ளிகளைப் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் பிரதமா் மோடி - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT