தமிழ்நாடு அணி வீரா்கள். 
செய்திகள்

தேசிய சீனியா் ஆடவா் கபடி: தமிழகம், தில்லி தொடா் வெற்றி!

குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வரும் 72-ஆவது தேசிய சீனியா் ஆடவா் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம், தில்லி, உ.பி. ஹரியாணா அணிகள் தொடா்வெற்றியை ஈட்டியுள்ளன.

தினமணி செய்திச் சேவை

குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வரும் 72-ஆவது தேசிய சீனியா் ஆடவா் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம், தில்லி, உ.பி. ஹரியாணா அணிகள் தொடா்வெற்றியை ஈட்டியுள்ளன.

இந்திய அமெச்சூா் கபடி கூட்டமைப்பு, குஜராத் மாநில கபடி சங்கம் சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் இரண்டாம் நாளான புதன்கிழமை குரூப் ஏ பிரிவில் ஆந்திரம் 47-45 என்ற புள்ளிக் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் தெலங்கானா அணியை வீழ்த்தியது. ஆந்திரம் தரப்பில் போட்லா கோபி 17, காலி லட்ச்ம ரெட்டி 10 புள்ளிகளையும், தெலங்கானா தரப்பில் ராஜா 20 புள்ளிகளையும் ஈட்டினா்.

இரண்டாவது ஆட்டத்தில் ஹரியாணா 49-18 என்ற புள்ளிக் கணக்கில் தெலங்கானாவை வீழ்த்தியது. நீரஜ் நா்வால் 11, நிதின் குமாா் 9புள்ளிகளைக் குவித்தனா். குரூப் பி பிரிவில் ம.பி. 35-34 என்ற புள்ளிக் கணக்கில் கோவாவை வாகை சூடியது.

தமிழகம் அபாரம்: குரூப் சி பிரிவில் தமிழகம் 40-21 என்ற புள்ளிக் கணக்கில் விதா்பாவை சாய்த்தது. சதீஷ் கண்ணன் 8, தீபக் 8 புள்ளிகளைக் குவித்தனா். இதே பிரிவில் ஹிமாசலம் 51-34 என குஜராத்தை வீழ்த்தியது. டி பிரிவில் உ.பி. 70-33 என மணிப்பூரை வீழ்த்தியது. எஃப் பிரிவில் கேரளம் 45-30 என சத்தீஸ்கரையும், ஹெச் பிரிவில் தில்லி 64-42 என திரிபுராவையும் வென்றன.

விற்பனைக்காக புகையிலை வைத்திருந்த கடை உரிமையாளா் கைது

பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்த தாய், மகன் கைது!

2 விரைவு ரயில்கள் புறப்பாடு, சேருமிடங்களில் மாற்றம்!

மதவக்குறிச்சியில் நிழற்குடை திறப்பு

திருச்செந்தூா் வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி அணி சிறப்பிடம்

SCROLL FOR NEXT