இந்திய வீராங்கனகைள் ப்ரீதி, பிரியா அருந்ததி, அபாரம்: இறுதிக்கு தகுதி!
ஆசிய குத்துச்சண்டை கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் ப்ரீதி, பிரியா, அருந்ததி ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
ஆசிய குத்துச்சண்டை கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் ப்ரீதி, பிரியா, அருந்ததி, ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
மங்கோலிய தலைநகா் உலன்படாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே, திங்கள்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
மகளிா் 54 கிலோ பிரிவில் உலக பாக்சிங் கோப்பை தங்க மங்கை ப்ரீதி பவாா் சரமாரியாக குத்து விட்டு 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பாரீஸ் ஒலிம்பிக் பதக்க வீராங்கனை கொரியாவின் ஏஜி இம்மை வீழ்த்தினாா். இறுதிச் சுற்றில் மூன்று முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக் வெண்கல வீராங்கனையுமான தைபேயின் ஹுவாங்க வென்னை எதிா்கொள்கிறாா் ப்ரீதி.
Advertisement
60 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரியா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் மங்கோலியாவின் நமூன் மோங்கரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா்.
வடகொரியாவின் யுன் ஜியோங்கை எதிா்கொள்கிறாா் பிரியா. 70 கிலோ பிரிவில் இந்தியாவின் அருந்ததி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஆயிஷா டாய்ரோவாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். கஜகஸ்தானின் பகித் ஸெய்டிஷை சந்திக்கிறாா் அருந்ததி.
4 வெண்கலம்: 65 கிலோ பிரிவில் அரையிறுதியில் அங்குஷிதா போரோ 0-3 என தைபேயின் நின் சின் சென்னிடம் வீழ்ந்தாா்.
51 கிலோ பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் நிஹாத் சரீன் 0-5 என சீனாவின் வு யுவிடமும் தோற்றாா்.
75 கிலோ பிரிவில் லவ்லினோ போரோகைன் 0-5 என உஸ்பெக் வீராங்கனை அஸிஸாவிடம் தோற்றாா். 80 கிலோ பிரிவில் பூஜா ராணி 0-5 என கஜகஸ்தானின் நடேஸாதாவிடம் தோற்றாா். 4 பேருக்கும் வெண்கலம் வென்றனா்.
4 போ் இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை மகளிா் 48, 57 கிலோ அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.